“திருமண போட்டோ Delete..!!”.. கணவரை பிரிந்தாரா ரோஜா நடிகை..?? குழம்பும் ரசிகர்கள்..!!

சன்டிவியில் ஒளிபரப்பாகி வந்த ரோஜா சீரியல் மூலமாக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த நடிகை தான் பிரியங்கா நல்காரி. இவர் சமீபத்தில் தனது காதலரை திருமணம் செய்து கொண்ட நிலையில் திடீரென தனது கணவருடன் எடுத்து கொண்ட போட்டோ வீடியோ என அனைத்தையும் டெலிட் செய்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்து இருக்கிறார்.

ரோஜா சீரியலில் கிட்டதட்ட 4 ஆண்டுகள் தொடர்ந்து நடித்த பிரியங்கா பின்னர் ஜீ தமிழில் சீதாராமம் என்ற தொடரில் நடித்து அசத்தி வந்தார். ஒரு கட்டத்தில் திடீரென சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்து ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த பிரியங்கா, கடந்த வருடம் மார்ச் மாதம் மலேசியாவில் உள்ள ஒரு கோவிலில், தனது காதலரும் தொழிலதிபருமான ராகுல் வர்மா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இருவரது போட்டோக்களும் இணையத்தில் வெளியாகி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

READ MORE: ஐயய்யோ பாவம்…!! சிறகடிக்க ஆசை மீனாவிற்கு ஏற்பட்ட விபத்து…!!

திருமணத்திற்கு பிறகு நடிக்க போவது இல்லை என்று கூறிய பிரியங்கா, மலேசியாவில் குடியேறி தனது கணவருடன் சேர்ந்து புது ஓட்டல் ஒன்றைதொடங்கினார். நடிக்க மாட்டேன் என்று சொன்னவர் திடீரென மீண்டும் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் நள தமயந்தி சீரியலில் நடிக்க துவங்கினார்.. இது ரசிகர்களுக்கு ஒருவித குழப்பத்தை உண்டாக்கியது.

P1

இந்த நிலையில தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கணவருடன் எடுத்துக்கொண்ட போட்டோக்கள் வீடியோக்கள் என அனைத்தையும் டெலிட் செய்து இருக்கிறார் பிரியங்கா.. இதன் மூலம் பிரியங்கா திருமணமான ஒரு வருடத்திற்குள் கணவரை பிரிந்துவிட்டாரா என்ற கேள்வி தற்போது ரசிகர்களிடையே எழுந்து உள்ளது.

அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் நேரலையில் ரசிகர் ஒருவர் பிரியங்காவிடம், “நீங்கள் சிங்கிளா..??” என கேட்க அதற்கு பிரியங்கா, “ஆம்..!!” என்று பதில் அளித்துள்ளார். இது ரசிகர்களுக்கு மேலும் அதிர்ச்சியை அளித்து இருக்கிறது. இதன் மூலம் பிரியங்கா தனது திருமண உறவை முறித்து கொண்டாரோ என்ற ரசிகர்களது சந்தேகம் மேலும் வலுத்துள்ளது.. ஆனால் இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை வெளியாகவில்லை.