“என்னங்க இதெல்லாம்..!! லாஜிக் எங்க போச்சு..?? எதிர்நீச்சல் தர்ஷினி கோர்ட் ஸீன் சொதப்பல்..

அட போங்கப்பா..!! தர்ஷினி வீடியோ ஸீன் எப்படில்லாமோ இருக்கும் னு எதிர்நீச்சல் ரசிகர்கள் யோசிக்க.. கடைசியில் இப்படி பண்ணிட்டீங்களே..!! ஆனா.. ஆதாரம் ஒழுங்கா இல்லாம போலீஸ் தான் மானாவரியா பெண்களை கைது பண்ணங்க அப்படின்னு நெனச்சா.. இப்போ நீதிபதி அதுக்கும் மேல இருக்கார்.

உண்மையாகவே ஒரு பொண்ணு காணாமல் போய் அது வீடியோ பண்ணி இருந்தா எப்படி பண்ணி இருக்கும்..!! ஒன்னு.. கடத்தியவர்கள் வருவதற்குள் வேக வேகமாக பேசுவார்.. இல்லைனா கடத்தல் காரர்கள் காதில் கேட்டு விடக்கூடாது என்று சத்தம் குறைவாக பேசுவார்.. ஆனால் எப்படி பேசினாலும் கடத்தப்பட்ட அந்த கலவரமும், பயமும் முகத்தில் தெரியும்..

ஆனால் தரிஷிணி வீடியோ பாருங்க.. LKG பாப்பா மேடையில பேச்சு போட்டியில தயங்கி தயங்கி டயலாக் பேசுற மாதிரி பேசுறாங்க.. இதை கூட நீதிபதி கண்டுகொள்ளவில்லை. சரி.. கடத்தப்பட்ட பொண்ணு எப்படி வீடியோ எடுத்து இருக்கும்..?? அப்படியே எடுத்தாலும் அந்த வீடியோவை சரியாக கோர்ட்டில் அந்த பெண்ணுடைய கேஸ் நடந்து கொண்டு இருக்கும் போது எப்படி கொடுத்துவிட முடியும்.. அப்படி கொடுத்து விட்டால் கொண்டுவந்து கொடுத்தது யாரு..?? வீடியோவை கோர்ட் வரை கொண்டுவர முடிந்த தர்ஷினியால்.. அவரே கோர்ட்டுக்கு வந்து விட முடியாதா..??

அப்படியே தர்ஷினி வீடியோ அனுப்பினாங்கனு வைத்து கொண்டாலும், கரெக்டா குணசேகரன் வக்கீல் கைக்கு அந்த வீடியோ எப்படி கிடைத்தது. அவரும் அதில் தர்ஷினி இதை தான் பேசி இருப்பாங்கனு தெரிஞ்ச மாதிரி வீடியோவை பார்க்காம, உடனே கோர்ட்டில் சமர்ப்பிக்கிறார். என்னங்க இதெல்லாம்..!!

READ MORE: “திருமண போட்டோ Delete..!!”.. கணவரை பிரிந்தாரா ரோஜா நடிகை..?? குழம்பும் ரசிகர்கள்..!!

இதுலயே அப்பட்டமாக தெரியுது.. இது குணசேகரன் பெண்களையும் ஜீவானந்தத்தையும் மொத்தமாக சிக்க வைக்க பண்ண வேலை என்று.. அது தர்ஷினியை இல்ல.. AI டெக்னாலஜி பயன்படுத்தி வேற நபரை தர்ஷினியா காட்டி இருக்கலாம்.. அப்படி இல்லனா தர்ஷினியை மிரட்டி பேச வச்சு கூட இருக்கலாம்.. ஆனா பேச்சும் குரலும் தர்ஷினி மாதிரியே இல்ல..

இவ்ளோ விஷயம் இருக்கு.. ஆனா இதுல ஒன்னு கூடவா நீதிபதிக்கு தெரியாது.. ஆதாரம் கிடைச்சா அதோட உண்மை தன்மையை ஆராய வேண்டாமா..??  ஆனா சாருபாலா கண்டுபுடிச்சிட்டாங்க. இன்னைக்கான எதிர்நீச்சல் ப்ரோமோ-ல (Ethirneechal Promo) குணசேகரன்.. “கடத்துனது அவன் தான்..!! வீடியோ அனுப்புனது யாரு..!!” னு கேட்க.. “யோவ் குணசேகரா.. உன் வேலை தான இது..!!” னு சொல்லாம சொல்லுற மாதிரி… “எனக்கு தெரியும் குணசேகரன்..!!” னு சாருபாலா குணசேகரனை மடக்குறாங்க..

ஆனா என்ன குணசேகரன் இவ்ளோ பண்ணியும் கடைசில மொக்கை வாங்கிட்டார். ஜீவானந்தம் சொல்லி கொடுத்த மாதிரி ஈஸ்வரி பேச, மீதம் 3 பேரும் இப்போ வெளிய வந்துட்டாங்க. இதை குணசேகரன் எதிர்பார்க்கல..

குணசேகரனுக்கு இனியும் என்ன தான் வேணும் தெரியல.. ஆனா கடத்தனது இந்த ஆளு தான்னு நாளுக்கு நாள் ரசிகர்களுக்கு உறுதி ஆகிட்டே போகுது.. இனி தர்ஷினியை யார் கண்டுபிடிக்க போறாங்க..!! எப்படி கண்டுபிடிக்க போறாங்க..!! னு பொறுத்து இருந்து பார்க்கலாம்..