“போடு..!! வெறித்தனம்..!! இனி ஜீவானந்தம் ஆட்டம் ஆரம்பம்..!!”

யப்பா..!! எரியிர நெருப்புல எண்ணெயை ஊத்துற கதையா என்ன வாய் அந்த ஆச்சிக்கு..!! ஏற்கனவே பிரச்சனை வெடித்து வீடு ரெண்டு பட்டு கிடக்கு. இதுல கொளுத்தி போடுற வேலையை சரியா பண்ணுறாங்க மெய்யப்பன் பேமிலி. இதுல அந்த ஆச்சி, “நீங்க போங்க பா.. நான் குணசேகரன் தம்பி வீட்டுல 2 நாள் தங்கிட்டு வாரேன்..!!” ன்ற மாதிரி சொல்லி இருக்கு.. இன்னும் குணசேகரன் வீட்டுல உட்காந்துகிட்டு என்னென்ன அக்கப்போர் பண்ண போறாங்களோ தெரியல.

இன்னொரு பக்கம், ஈஸ்வரி பக்கம் நியாயம் இருக்குனு தெரிஞ்சாலும் சாட்சிகள் அவங்களுக்கு எதிராக வலுவாக இருக்கிறதால ஜாமீன் தர நீதிபதி மறுத்துடுறாங்க. இந்த நிலையில இன்னைக்கான எதிர்நீச்சல் ப்ரோமோல ( Ethirneechal Today Promo) பார்த்தீங்கன்னா மறுபடியும் போலீஸ் கஸ்டடியில் எடுத்து ஈஸ்வரியையும் ஜீவானந்தத்தையும் விசாரிக்க கூட்டிட்டு போக போறாங்க.

முதலில் ஜீவானந்தம் தான் போலீஸ் வேன்-க்கு போறார். கூட ஒரு கான்ஸ்டபில் போறார். ஜீவானந்தம் வேன்-க்கு போனதும், அந்த போலீஸ், சார்.. போங்க.. போய் பொண்ணை கண்டுபிடிங்க..!!” னு ஜீவானந்தம் எஸ்கேப் ஆக உதவி பண்ணுறார். அதோட ஜீவானந்தம் அடிச்சி போட்டு எஸ்கேப் ஆன மாதிரி வேன் சீட்டுல மயங்கி கிடக்குற மாதிரி அந்த போலீஸ் நடிக்கவும் செய்யுறார்.. இன்னொரு பக்கம் ஜீவானந்தம் யாருக்கும் தெரியாம எஸ்கேப்.

READ MORE: “யப்பா..!! சரியான ஆளுங்க..!! வன்மத்தை மொத்தமாக கொட்டும் குணசேகரன்..!!”

ஈஸ்வரியை மத்த போலீஸ் எல்லாம் வேன் ல ஏத்துறதுக்கு கூட்டிட்டு வர.. அங்க இந்த போலீஸ் சீட் ல மயங்கி கிடக்க.. “யோவ்.. என்னய்யா ஆச்சு..!!” னு போலீஸ் இன்ஸ்பெக்டர் கேட்கிறார்.. உடனே “ஜீவானந்தம் எஸ்கேப் ஆகிட்டார் சார்..!!” னு சொல்லுறார் அந்த போலீஸ்.
அதோட ஈஸ்வரி கிட்ட ஜீவானந்தத்தை அனுப்பி வச்சுட்டேன் ன்ற மாதிரி அந்த போலீஸ் கண்ணால ஜாடை காட்ட அதை ஈஸ்வரியும் புரிஞ்சிக்கிறாங்க.

இனி ஜீவானந்தம் ஆட்டம் ஆரம்பம். பெண்கள் தான் தர்ஷினியை கண்டுபிடிக்க போறாங்க..னு ரசிகர்கள் நினைத்த நிலையில இப்போ ஜீவானந்தம் களம் இறங்கி இருக்கார். ஒரு அப்பா ஸ்தானத்துல இருந்து ஜீவானந்தம் தர்ஷினியை எப்படியாவது மீட்டு விடுவார்னு நம்பலாம்..