குடி போதையில் ஜனனி..?? காரில் ஆண் நண்பருடன் ‘ராங் ரூட்’ டில் வந்து விபத்து..!!

எதிர்நீச்சல் சீரியலில் ஜனனி என்ற ஹீரோயின் கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை மதுமிதா, குடி போதையில் தனது ஆண் நண்பர் ஒருவருடன் கார் ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்திய சம்பவம் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சன் டிவியில் ரசிகர்களின் அமோக ஆதரவுடன் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் ‘எதிர்நீச்சல்’. இந்த சீரியலில் லீட் ரோலில் நடித்து வரும் நடிகை மதுமிதா, முதலில் கன்னட சீரியலில் அறிமுகமானார். ஆனால் எதிர்பார்த்த அளவு அவருக்கு வரவேற்பு கிடைக்காத நிலையில் தெலுங்கு மொழியில் கவனம் செலுத்தினார்.

கன்னடம் போல் அல்லாமல் தெலுங்கில், இவர் நடித்த சீரியல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதுவே தமிழில் ‘எதிர்நீச்சல்’ சீரியலில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பையும் மதுமிதாவுக்கு வழங்கியது.

இது ஒருபக்கம் இருக்க தற்போது நடிகை மதுமிதா சர்ச்சை ஒன்றில் சிக்கியுள்ளார். அதாவது இவர் குடி போதையில் தன்னுடைய ஆண் நண்பர் ஒருவருடன் காரில் வந்துள்ளார். அதுவும் ஒன் வே யில்.. ராங் ரூட்டில்..!! இந்நிலையில் எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த போலீஸ் மீது இவர்களது கார் மோதியுள்ளது. இந்த சம்பவம் சென்னை சோழிங்க நல்லூர் அருகே நடந்துள்ளது.

சிறிது நேரத்தில் சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார் விபத்தில் காயமடைந்த நிலையில் இருந்த காவலரை தனியார் மருத்துவ மனையில் அனுமதித்து உள்ளனர். மேலும் விபத்தை ஏற்படுத்திய நடிகை மதுமிதா மற்றும் அவரது ஆண் நண்பரை காவல் நிலையத்திற்கு கூட்டி சென்றதோடு அவர்களது காரையும் பறிமுதல் செய்து இருக்கின்றனர் போலீசார்.

விசாரணையில்.. ராங் ரூட்டில் வந்தும் கூட.. “நாங்கள் சரியாக தான் வந்தோம்..!! எதிரில் வந்த போலீஸ் தான் வேகமாக வந்ததாக போலீஸ் மீது இருவரும் குற்றம் சுமத்தி இருக்கின்றனர்..!!” மதுமிதாவுடன் வந்த அந்த ஆண் நண்பர், கேரளாவை சேர்ந்தவர் எனவும் சென்னையில் உள்ள ஐ.டி நிறுவத்தில் பணிபுரிகிறார் என்றும் கூறப்படுகிறது.

இந்த விபத்து நடந்து இரண்டு மூன்று நாட்களுக்கு மேல் ஆகிய நிலையில், இது தொடர்பாக யாராவது தொலைபேசியில் விசாரித்தால்.. மதுமிதா தரப்பு, ” ஆமா.. விபத்து நடந்தது உண்மைதான்.. ஆனால் அது ஒரு சின்ன விபத்து.. என் நண்பர் பண்ணிட்டாரு.. இதை தாண்டி பெருசா இதுல பேச எதுவும் கிடையாது..!!” என போன் இணைப்பை துண்டித்ததாகவும் தகவல்கள் கசிந்து இருக்கிறது. இந்த விஷயம் தான் தற்போது சமூக வலை தளத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது.