அப்படி போடு.. சக்தியின் பேச்சால் ஆடிப் போன குணசேகரன்..!!

“இனி குணசேகரன் வேற நாங்க வேற.. !!”.. சக்தியோட இந்த டயலாக் சும்மா தீயா இருந்துச்சு. வெறித்தனமா எதிர்நீச்சல் சீரியல் இப்போ நகர துவங்கி இருக்குங்க.. என்ன நடக்க போகுதுனு தெரியாம சீரியல் கொண்டு போறது ஒரு ரகம் னா.. அடுத்து நடக்க போற ஸ்டோரி இதுதான்றதை Hint ஆஹ் குடுத்துட்டு.. அதை எப்படி நடத்த போறாங்களோனு ரசிகர்களை யோசிக்க வைக்கிறது இன்னொரு ரகம்.. எதிர்நீச்சல் இப்போ 2வது ரகம்.

அடுத்து என்ன ன்றதை குணசேகரன் சொல்லிட்டார்.. “சொத்துக்கும் உங்களுக்கும் இனி சம்மந்தம் இல்ல.. அடிமட்டத்தில இருந்து வளர்ந்து வாங்க டா..!!” னு சொல்லிட்டார்.. ஆனா “இதே வீட்டுல இருங்க.. பிரச்சனை இல்லை..!!” ணும் சொன்னதால தனிதனியா வெளியேறி இவங்க கஷ்டப்படுறமாதிரி காட்டமாட்டாங்க..

இனி ஒரு ஒருத்தரா முன்னேற முதல்படி எடுத்து வைக்க.. அதை எப்படி கெடுக்குறதுனு குணசேகரன் ஸ்கெட்ச் போட.. அதை முறியடிச்சு இவங்க ஜெயிக்க.. னு இதை நோக்கி தான் கதை நகர போகுது. போதா குறைக்கு மெய்யப்பன் பிரதர்ஸ் வேற ஜனனியை ஒன்னும் இல்லாம பண்ணனும்னு இனி குணசேகரன் கூட கை கோர்த்துக்கிட்டு உள்ளே வருவாங்க.

READ MORE: “திருமண போட்டோ Delete..!!”.. கணவரை பிரிந்தாரா ரோஜா நடிகை..?? குழம்பும் ரசிகர்கள்..!!

இன்னொரு பக்கம், “என் பொண்ணு திரும்பி வரும்போது என் அப்பா தான் எனக்கு எல்லாம்னு சொல்லுவா..!!” னு அடிச்சு பேசுறார் குணசேகரன். அதுக்கு பின்னாடி நிச்சயமா ஏதோ மர்மம் இருக்கு. ஒருவேளை தர்ஷினி அப்படி நடந்துகிட்டா.. தர்ஷினி கரிகாலன் கல்யாண கதையை கூட மறுபடியும் ஆரம்பிச்சு வைப்பார் குணசேகரன். கல்யாணத்தை நிறுத்த பல போராட்டம் னு கூட கதை நகரலாம். ஆனா ஆதிரை கரிகாலனை பார்த்து சில எபிஸோடுகளுக்கு முன்னாடி நாக்கை புடுங்குற மாதிரி கேட்ட கேள்விக்கு கரிகாலன் தர்ஷினி பக்கம் கூட திரும்ப கூடாது. பபார்க்கலாம் என்ன நடக்குதுன்னு.

இனி தன்மானத்தோட ஞானம், கதிர், சக்தி னு எல்லாரும் உழைக்க வேண்டிய நேரம் வந்தாச்சு.. இனி எதிர்நீச்சல் போட்டு பெண்கள் கூட இந்த கணவன்மார்களும் முன்னேற வேண்டியது தான்..!!