“யோவ்..பெரிய மனுஷன் செய்யுற காரியமா இது..!!” பொங்கி எழுந்த ஜனனி சக்தி..!!

“இந்தா.. வேலையை காட்டிட்டாருல.. இதான் குணசேகரன்..!!” அப்போ அப்பத்தாவோட 40% சொத்தை மனசுல வச்சு தர்ஷினியை கடத்தி.. அதுமூலமா அவருக்கு சாதகமாக வீட்டு பெண்களை ஜெயிலில் அடைக்கிறது.. தேர்தலில் ஈஸ்வரிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்துவது.. ஜீவானந்தத்தை பழி வாங்குவது என தனது சுய லாபத்திற்காக எல்லா விஷயத்தையும் பண்ணி இருக்கார் குணசேகரன்.

ஜீவானந்தம் கைதாகி போகும் முன் ஜனனியை பார்த்து, “முதல்வரோட தனிப்பிரிவு இருக்கு.. அதுல Complaint பண்ணுங்க ஜனனி..!! உடனடியா Action எடுப்பாங்க.. விட்டுறாதீங்க..!! னு சூப்பர் ஐடியா கொடுத்துட்டு தான் போய் இருப்பார். இன்னைக்கான எதிர்நீச்சல் ப்ரோமல ( Ethirneechal Promo Today)
பார்த்தீங்கன்னா.. ஒரே அறையில் எல்லாரும் இருக்க.. பெண்களோட காயங்கள் எல்லாத்துக்கும் அவங்க அவங்க வீட்டுக்காரர்கள் உட்காந்து மருந்து போட்டுக்கிட்டு இருக்காங்க.

அந்த நேரம் தர்ஷினி தரிஷிணி பத்தி பேச்சு வருது. அப்போ சக்தி, “இந்த ஆள் தான் இவ்ளோவுக்கும் காரணம்னா.. இனி போலீசை நம்பி பிரயோஜனம் இல்ல..!!” னு சொல்ல.. இதை கேட்குற கதிர், ஆதிரை ஞானம் எல்லாரும், “அட.. அண்ணன் வேலையா இது..!!” னு ஷாக் ஆகுறாங்க. ஜனனி இதை விட Powerful ஆன இடத்துக்கு போகணும்..னு ஜீவானந்தம் சொன்ன பிளானை சொல்லுறாங்க.

ஆனா இதுல ஒரு விஷயம் இருக்கு. “ஜீவானந்தம் சார் குடுத்த ஐடியா தான் இது..!! னு ஓப்பன் ஆஹ் ஜனனி சொல்ல போறாங்களா..?? இல்ல எப்பவும் மாதிரி தனியா நாம ஸ்கோர் பண்ணணும்.. னு ஜனனியே யோசிச்ச மாதிரி இந்த ஐடியாவை சொல்ல போறாங்களா தெரியல.

READ MORE: “என்னங்க இதெல்லாம்..!! லாஜிக் எங்க போச்சு..?? எதிர்நீச்சல் தர்ஷினி கோர்ட் ஸீன் சொதப்பல்..

சக்தி சந்தேகத்தை உறுதிபடுத்துற மாதிரி, “அந்த கிழவி சொத்து Full ஆஹ் பிள்ளைங்க பேர்ல தான எழுதி வச்சது.. அதை என் பேருக்கு மாத்திடுங்க..!!” னு வாய் கூசாம பேசுறார். ஒருவேளை அப்படி பண்ணா தான் நான் தர்ஷினியை கண்டுபிடிப்பேன் னு டீல் பேசுறாரோ என்னவோ..!!

அதேபோல, “என் அப்பா தான் எனக்கு எல்லாமே.. னு தர்ஷினி சொல்லுவா..!!” னு குணசேகரன் சொல்ல, “அப்போ நீங்க தான் கடத்தி வச்சு இருக்கீங்களா ..??” னு ஜனனி பாயிண்ட்டை புடிச்சு கேட்குறாங்க. இதை கேட்டு “ஆஹா.. கண்டுபிடிச்சிட்டாளே..!!” னு குணசேகரன் திரு திருன்னு முழிக்க அதோட புரோமோ முடியுது..

ஒன்னு குணசேகரன் தான் ஒட்டு மொத்த கடத்தலுக்கும் மூல காரணமா இருக்கனும்.. இல்லைனா, காட்டுல இருந்து தப்பிச்சு போன தர்ஷினி
குணசேகரன் கையில சிக்கி இருக்கணும்.. அப்படி சிக்குனதும் இந்த சூழலை தனக்கு சாதகமாக பயன்படுத்தி, “உன் அம்மாவை ஏதாவது பண்ணிடுவேன்..!!” னு பிளாக்மெயில் பண்ணி தர்ஷினியை இப்படி பேச வச்சு இருக்கணும்.. பார்க்கலாம்.. இன்னும் என்னென்ன Twist எல்லாம் இருக்குதுன்னு. இவ்ளோ கிரிமினல் வேலை பார்த்துக்கிட்டு இருக்குற குணசேகரன் எப்படி மாட்ட போறார் ன்ற கேள்வியோட ஆவலா நாமும் காத்திருப்போம்..!!