அட்ரா சக்கை..!! இனிதான் சம்பவமே..!! கதையை மாற்ற போகும் தர்ஷினி வீடியோ..!!

அட்ரா சக்கை..!! என்ன ஒரு ட்விஸ்ட்.. தர்ஷினி இப்படி ஒரு ட்விஸ்ட் கொடுப்பாங்கனு சத்தியமா எதிர்பார்க்கலங்க.. வேற லெவல்..!! எதிர்நீச்சல் சீரியலோட ஸ்பெஷல் ப்ரோமோல ( Ethirneechal Serial Special Promo ) தர்ஷினி பேசுன வீடியோ கோர்ட்டுக்கு வருது. அப்படி அந்த வீடியோல தர்ஷினி என்ன சொல்லி இருப்பாங்கனு வாங்க.. நாம Predict பண்ணுவோம்.

இன்னைக்கான Ethirneechal Special Promoல பார்த்தீங்கன்னா.. 4 பெண்களையும் எப்படியாவது ஜெயிலுக்கு உள்ளே வைக்கணும்னு குணசேகரன் கங்கணம் கட்டிக்கிட்டு இருக்கார். இன்னொரு பக்கம், பெண்களுக்கு ஆதரவா சாருபாலா கோர்ட் ல ஆஜர் ஆகி இருக்காங்க.. பெண்கள் மேல சுமத்தப்பட்ட ஒரு ஒரு குற்றச்சாட்டுக்கும் கூண்டுல நின்னுகிட்டு ஆக்ரோஷமா பதிலடி கொடுக்குறாங்க பெண்கள்.. இது எதிர்நீச்சல் ப்ரோமோ ல ( Ethirneechal Promo) பெண்களோட முகபாவனைகள் மூலமா நம்மால புரிஞ்சிக்க முடியுது.

அப்போதான் மிகப்பெரிய ட்விஸ்ட்.. தர்ஷினி பேசுன ஒரு வீடியோ ஆதாரம் கோர்ட்க்கு வருது. இதை யார் கொண்டு வந்ததுனு தெரியல. அந்த வீடியோல தர்ஷினி வாக்குமூலம் மாதிரி ஏதோ பேசுறாங்க.. ஆனா அது சந்தோஷமான விஷயம் இல்லன்றது மட்டும் புரியுது. ஏன்னா வீட்டு பெண்களோட Reaction- லயும், சக்தி கதிர், தர்ஷன் னு எல்லாரோட Reaction லயும் அவ்ளோ பெரிய அதிர்ச்சி தெரியுது.

இன்னைக்கான ப்ரோமோ-க்கு (Ethirneechal Promo Today) கீழே ரசிகர்கள் பலரும், ” ஒரு வேளை தன்னோட அம்மாவுக்கும், சித்திகளுக்கும் எதிரா தர்ஷினி சாட்சி சொல்ற மாதிரி காட்டப்போறாங்க போல..!!” னு கமெண்ட் பண்ணுறதை நம்மால பார்க்க முடியுது. ஆனா.. தர்ஷினி வீடியோ பேசுற அதே சமயம் கவனிச்சீங்கன்னா, கூண்டுல நிற்குற குணசேகரன் கண்ணும் கலங்குற மாதிரி காட்டுறாங்க.

அதே போல நேத்து எபிசோட்ல ( Ethirneechal Episode Yesterday) ஈஸ்வரி கிட்ட ஜீவானந்தம் பேசும் போது, “இதை பிரச்சனையா பார்க்காம சமூதாயத்துல நடக்குற போராட்டமா பாருங்க.. நிச்சயமா இது மாதிரி நிலைகுலைந்து நிக்குற பெண்களுக்கு உங்க தைரியம் ஒரு முன்னுதாரணமா இருக்கும். உங்க கூட ஒரு நண்பனா போராளியா நான் நிற்குறேன்..!!” னு சொல்லி இருப்பார் ஜீவானந்தம். அதுனால ஸீன் கண்டிப்பா அனல் பறக்க போகுது. அதேபோல தர்ஷினியும் பயந்த பொண்ணு இல்ல.. அவங்களை மிரட்டி உருட்டிலாம் பெண்களுக்கு எதிரா பேச வைக்க முடியாது.

இப்போ.. தர்ஷினி என்ன சொல்லி இருப்பாங்கனு நாம Predict பண்ணலாம்.. தர்ஷினி நல்லா படிக்குற.. Sports ல சாதிக்க துடிக்கிற ஒரு பொண்ணு.. கனவுகளை சுமந்துகிட்டு ஆகாயத்துல சிறகை விரிச்சு பறக்கணும்னு ஆசைப்பட்ட பொண்ணோட இறக்கையை ஓடச்சு உட்கார வைக்க பார்த்தார் குணசேகரன்.. So “இனி நான் வீட்டுக்கு திரும்ப வர மாட்டேன்.. என் வாழ்க்கை மற்றும் லட்சியத்தை தேடி நான் போறேன்..!!” ன்ற மாதிரி ஒரு கடினமான முடிவை தர்ஷினி எடுத்து இருப்பாங்களோ னு தோணுது.

 

Ethirneechal Promo ல கூட ஜனனியோட Background Voice, ” தர்ஷினியோட அந்த வார்த்தைகளை கேட்க நீங்களும் உங்க மனசை கல் ஆக்கிக்கோங்க..!!” னு சொல்லுறதை வச்சு பார்க்கும் போது ஸீன் சும்மா தெறிக்க போகுதுனு புரியுது.

READ MORE: அட.. வேற லெவல் ட்விஸ்ட்..!! குணசேகரன் முகத்திரையை கிழிக்க போகும் சாருபாலா..!!

ஆனா காட்டுல இருந்து தப்பிச்சு போன தர்ஷினி, எப்படி Costume லாம் மாத்தி, வீடியோ பண்ணி, கோர்ட் வர தனியா கொண்டு வர முடிஞ்சது..?? இதுக்கு பக்க பலமா இருந்து யாரோ ஹெல்ப் பண்ணுறாங்க. அது யார்- ன்றது மிக பெரிய கேள்வி. அதே போல, தர்ஷினியை கடத்தனது யார்..?? எதுக்காக..?? ன்றதும் புதிராக தான் இருக்குது.

தர்ஷினி பேசுறது கண்டிப்பா “பொண்ணுங்கனா.. படிக்க வச்சோமா.. படிச்சு முடிஞ்சதும் கட்டி வச்சோமா.. அவ்ளோதான் நம்ம கடமை முடிஞ்சது..!!” னு யோசிக்கிற பல பெற்றோர்களுக்கு ஒரு Eye Opening- ஆ இருக்கும்னு தோணுது.. அதெல்லாம் இல்ல.. வீட்டு பெண்களை தர்ஷினி
மாட்டிவிடுற மாதிரி தான் பேச போறாங்கனா கண்டிப்பா அது கொஞ்சம் மொக்கையா ஆகிடும்.. பார்க்கலாம் என்ன நடக்குதுனு..!!!