அட.. வேற லெவல் ட்விஸ்ட்..!! குணசேகரன் முகத்திரையை கிழிக்க போகும் சாருபாலா..!!

சன்டிவியில் ஒளிபரப்பாகி வந்துட்டு இருக்குற எதிர்நீச்சல் சீரியல் ( Ethirneechal Serial) ல ஈஸ்வரி, ரேணுகா, நந்தினி, ஜனனி-னு 4 பெண்களையும் காப்பாற்ற களம் இறங்கிட்டாங்க சாருபாலா.. இது சரியான Master Stroke.. இதை குணசேகரனே எதிர்பார்த்து இருக்க மாட்டார். இன்னைக்கான எதிர்நீச்சல் சீரியலோட ப்ரோமோவில் ( Ethirneechal Promo) குணசேகரன் ஓட அந்த திருட்டு முழியே அதை நிரூபிச்சிடுச்சு. இவ்வளவு ஏன்..!! வீட்டு பெண்கள் கூட இதை எதிர்பார்க்கல.

பொதுவாக குணசேகரன் பார்த்தீங்கண்ணா.. Online ல உணவு ஆர்டர் பண்ணி.. அது வீட்டுக்கு டெலிவரிக்கு வந்தாலே, “குணசேகரன் வீட்டுல சமைக்க ஆள் இல்லையோ.. அப்படின்னு ஊர் தப்பா பேசுமே..!!” னு அவ்ளோ ஸீன் போடுவார்.. ஆனா இன்னைக்கான ப்ரோமோ-ல ( Ethirneechal Promo) வீட்டு பெண்களை மறுபடியும் கோர்ட்டில் ஆஜர் படுத்த கூட்டிக்கிட்டு போறாங்க.. அந்த சமயம் குணசேகரன் கூடவே பெரிய மனுஷங்க என்ற பெயரில் சுற்றும் ஜால்ரா பேர்வழிகளையும் கோர்ட்டுக்கு வர வைக்குறார் குணசேகரன்.. அவர்களும் குணசேகரன் பேச்சுக்கு “ஆமா.. சாமி” போடுறாங்க.

இதை பார்த்து கோபமடைந்த சக்தி, ” அண்ணன் தம்பிகளுக்கு உள்ள இருக்குற பிரச்சனையை பெருசாக்கலாம் னு வந்தீங்களா..??” னு கேட்க.. “யாருடா அண்ணன் தம்பி..!!” னு குணசேகரன் கத்துறார்.

இதுக்கு பின்னாடி ஒரு உள் நோக்கமும் இருக்கு. எவ்வளவுக்கு எவ்வளவு இந்த பெண்கள் கைதானது வெளி உலகுக்கு தெரிய வருதோ அவ்வளவுக்கு அவ்வளவு தேர்தல் ல குணசேகரன் கை ஓங்கும்.. ஈஸ்வரிக்கு கெட்ட பெயர் ஏற்படும்.. ஈஸியா நாம ஜெயிச்சிடலாம் னு தான் முடிஞ்சவரை எல்லாருக்கும் கைதானதை தெரியப்படுத்த இப்படி ஸ்கெட்ச் போட்டு வர வச்சு இருக்கார் குணசேகரன்..

பெண்களை போலீஸ் வேன் ல இருந்து இறக்குராங்க.. பாவம்.. அவங்க நடக்க முடியாம.. இறங்கி நடந்து வராங்க.. அப்படி போகும் போது ஈஸ்வரி குணசேகரனை ஒரு முறை முறைச்சிட்டு தான் போறாங்க. ஒரு முறைப்போட முடிஞ்சு போகாம ஜெயில் ல இருந்து வெளிய வந்ததும் ஈஸ்வரி ஏதாவது அதிரடியான முடிவு எடுக்கணும்.. குறைந்தபட்சம் தேர்தல் ல ஜெயிச்சு குணசேகரன் மூக்கை ஒடைக்கணும் ஈஸ்வரி.

3

இன்னொருபக்கம் கதிர் குணசேகரனை பார்த்து, “இப்போ உனக்கு சந்தோஷமாயா..!! பாரு.. நடக்க கூட முடியாம போறாங்க..!!” னு ஆதங்கத்தோட.. அவ்ளோ வலியோட பேசுறார். கோர்ட்டுக்கு உள்ள எல்லாரும் போறாங்க. அப்போதான் யாரும் எதிர்பாராத விதமா பெண்களுக்காக வாதாட சாருபாலா என்ட்ரி குடுக்குறாங்க. வெறித்தனமான என்ட்ரி அது.. அதை குணசேகரன் அதிர்ச்சி ஓட பார்க்க அதோட புரோமோ முடியுது.

சாருபாலாவை Strong ஆன Lawer ஆஹ் காட்டணும். அதேபோல பெண்களும் ஜாமீன் ல வெளிய வரமாதிரி காட்டுனா நல்லாயிருக்கும். தர்ஷினி இப்போ எந்த நிலைமையில் இருக்காங்க னு தெரியல.. அவங்களை இந்த பெண்கள் கண்டுபிடிக்க போறாங்களா..?? இல்ல வேறு யாராவதா..?? சாருபாலா குணசேகரன் ஓட பிளான்-ஐ உடைச்சு தூள் தூள் ஆக்குவாங்களா..?? பொறுத்து இருந்து பார்க்கலாம்.